ஆளுநர்களை மரியாதையாக நடத்துங்கள்; - ஆளுநர் தமிழிசை.

ஆளுநர்களை மரியாதையாக நடத்துங்கள்; - ஆளுநர் தமிழிசை.

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு ஜெயந்தி ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகத்தில் புதுவை துணை நிலை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாராயணி பள்ளியிலிருந்து மேளதாளங்கள் முழங்க 10,008 மஞ்சள் குட நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது நாராயணி பழைய ஆலயத்தில் பொதுமக்கள் தங்களின் கைகளாலேயே அபிஷேகம் செய்தனர் அனைவருக்கும் ஆலய பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  "ஆன்மீகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது; இரண்டும் தான் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் சிலர் ஆன்மிகத்தை தவிர்த்து தமிழ் தான் அனைத்திற்கும் என்று சமீப காலமாக கூறிவருகிறார்கள், அது ஏற்புடையதல்ல; ஆன்மிகமும் தமிழும் ஒன்று தான்" என்று கூறினார். 

மேலும், " தமிழக முதல்வர் இந்துக்களுக்கு மட்டும் விநாயகர் சதுர்த்திக்கும் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்வதில்லை நான் பாகுபாடு பார்ப்பவன் இல்லை என முதல்வர் சொல்கிறார். ஆனால் இவர் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதது குறித்து நான் கேட்டி ருந்தேன் இதுவரையில் எனக்கு பதில் இல்லை" என்றும், .

மேலும், கவர்னர்கள் குறித்து தவறான கருத்துகளை கூறுகிறார்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அதிகாரங்கள் உள்ளது அதே போல் ஆளுநருக்கும் சில அதிகாரங்கள் உள்ளது எனவும், ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஏன் ஆளுநரை சந்தித்தார்கள்../ எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க   } 1200 ரூபாய்க்கு சிலிண்டர் விலை........ பாஜக அரசை கேள்வி கேட்க முடியாத அடிமையாக அதிமுக,.... ! - செந்தில் பாலாஜி.

அதோடு,  "எல்லோரையும் மரியாதையுடன் பேச வேண்டும். ஆளுநர்களாகிய எங்களுக்கு அதிகாரமில்லை என புதுவை முதல்வர் நாராயணசாமியும் கூறிவருகிறார். அதே போல் நான் புதுவையில் அதிக நாள் தங்கியிருப்பதாக நாராயணிசாமி கூறுகிறார். உண்டியல் குலுக்கி புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் விமானம் ஏற்பாடு செய்வதாக கூறுகிறார் அவர் உண்டியல் குலுக்க தேவையில்லை சேர்த்து வைத்திருந்த பணத்திலேயே அவர் ஏற்பாடு செய்யலாம். ஏற்கனவே புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் நேரடி விமானம் உள்ளது இதை கூட தெரியாமல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

மேலும், இந்தியாவில் கொரோனா இல்லாமல் போனதற்கு ஆன்மீகமும் காரணம் அறிவியலும் காரணம். தடுப்பூசியின் காரணம் இறைவனின் ஆசியும் மிக முக்கிய காரணம் என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க   } அரசு ஆசிரியர்களின் குழந்தைகள்...! "எந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது" அன்பில் மகேஷ்...!!