மேலும், நீர் இருப்பும் 60.78 டி.எம்.சி யில் இருந்து 40.29 டி.எம்.சியாக குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 78.31 அடியாக உள்ள நிலையில், "டெட் ஸ்டோரேஜ்" எனப்படும் குறைந்த பட்ச நீர் இருப்பு 30 அடியாக இருப்பு வைக்கப்பட்டு, மீதமுள்ள 48.31 அடி நீரை மட்டுமே பாசனத்திற்கு பயன் படுத்த முடியும். இதன் படி தற்போதைய நீரைக் கொண்டு இன்னும் 35 நாட்கள் மட்டுமே பாசனத்திற்கு நீர் திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.