பூஜா பட் நிலம் வாங்கியது செல்லாது...சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!

பூஜா பட் நிலம் வாங்கியது செல்லாது...சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!

பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை "கல்லூரி வாசல்" பட நாயகி பூஜா பட் வாங்கியது செல்லாது என்ற வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜெகதாலா என்ற கிராமத்தில் கடந்த 1978ஆம் ஆண்டில் பட்டியலினத்தவரான எம்.குப்பன் என்பவருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, அதை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் நிபந்தனை விதித்திருந்தார்.

பலரிடம் கைமாறிய அந்த நிலைத்தை, அஜீத் மற்றும் பிரசாந்த் ஆகியோருடன் "கல்லூரி வாசல்" என்ற படத்தில் கதாநாகியாக நடித்த பூஜா பட் கடந்த 1990ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகை பூஜா பட் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம், நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தற்போது, தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிக்க || "நூற்பாலைகளின் கோரிக்கையை பரிசீலித்திடுக" வைகோ அறிக்கை!