5 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு வரும் சோனியா காந்தி...!

திமுக சார்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, 5 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

திமுக மகளிர் அணி சார்பாக நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 5 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தமிழ்நாட்டிற்கு வருகை புரிகிறார்.

இன்று இரவு 10.40 மணியளவில் சென்னை விமான நிலையம் வரவுள்ள சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கவுள்ளார். 

தொடர்ந்து நாளை காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சோனியா காந்தியை சந்தித்து அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கவுள்ளனர். அதனை தொடர்ந்து சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி மதிய விருந்தளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com