பன்னீரில் வாய் கொப்பளித்து, தங்கத்தட்டில் சாப்பிட்டு வளர்ந்த தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, பின்னர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் நிரூபணமாகி வெளியில் வந்தார். பின்னர் சினிமாத் துறையில் நிலைத்து நில்லாது, ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே காலமானார்.