கடிதம் எழுதியதோடு கடமை முடியாது... மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல...

கடிதம் எழுதியதோடு கடமை முடியாது... மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல...

ஊரடங்கு காலத்தில் EMI செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து இதுவரை ரிசர்வ் வங்கி அறிவிக்காதது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.


ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக்கடன்களுக்கான மாத தவணையைச் (EMI) செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது கண்டனத்திற்குரியது. 

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச்  செய்திட வேண்டிய மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. இப்பிரச்னையில்   பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாக தலையிட வேண்டும் 

தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களும் 'கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது' என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன்  மாதத்தவணைகளிலிருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்