தமிழ்நாட்டை குழப்ப வந்திருக்கிறார் ஆளுநர்-வைகோ!

தமிழ்நாட்டை குழப்ப வந்திருக்கிறார் ஆளுநர்-வைகோ!
Published on
Updated on
1 min read

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

40 ஆண்டுகளுக்கும் மேலாக மரியாதை

நான் ஒரு வருடம் கொரோனா இருந்ததால் வரவில்லை. மூன்று வருடம் நான் சிறைச்சாலையில் இருந்ததனால் வரவில்லை 46 வருடம் தொடர்ந்து வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளேன். அவர் கடைப்பிடித்த ஒழுக்கம் சொல் ஒன்று செயலொன்று இல்லை என்ற அந்த இலக்கணம் அப்படிப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க என்று சொல்லி அவருக்கு ஆண்டுதோறும் இங்கே வந்து மலர் அஞ்சலி செலுத்துகிறோம் அவர் பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒரே நாள் என்பது தேவர் ஜெயந்தியின் சிறப்பு .

அனைத்து சமுதாயங்களிடையே ஒற்றுமை

தேவர் புகழ் வாழ்க எல்லா சமுதாயங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சகோதரத்துவத்தை பேண வேண்டும் சாதி மதத்துக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும் தமிழ்நாட்டை குழப்புவதற்காகவே ஒரு கவர்னர் வந்திருக்கிறார். அவர் அபாண்டமாக பேசுகிறார், அவதூறாக பேசுகிறார். அவரைப் போன்றவர்கள் தேவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com