தஞ்சை | சேத்தியாத்தோப்பு, திருப்பனந்தாள் சோழபுரம் வழியாக தனியார் பேருந்து கும்பகோணம் நொக்கி சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் ஏறும் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பின்பக்க படிக்கட்டில் தொங்கிய படியும் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.