டொமினிகா நீதிமன்றத்தில் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பொதுத்துறை வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு ஆண்டிகுவாவில் தஞ்சமடைந்திருப்பவர் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி. கடந்த மாதம் டோமொனிகாவில் இருந்து கியூபாவுக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்றது அந்நாட்டு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.