![55 குவாரிகளையும் ஆய்வு செய்ய குழு அமைப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்](http://gumlet.assettype.com/malaimurasu%2Fimport%2Fuploads%2Fimages%2F2022%2F05%2Fimage_750x_628ba2af8b326.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளையும் ஆய்வு செய்ய வெளிமாவட்ட அதிகாரிகளை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் விபத்து ஏற்பட்டு 4 நபர்கள் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், இன்று காலை குவாரிபகுதியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த குவாரியில் நடந்த விபத்தின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய 6 சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த சிறப்புகுழுவில் இடம்பெற்றுள்ள பிற மாவட்ட அதிகாரிகள், குவாரிகளில் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாக தெரிவித்தார்.