சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தனர்!

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தனர்!
Published on
Updated on
1 min read

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி, நாகை மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை வந்தனர்

இதில் எடுக்கப்பட்ட சுமூகமான முடிவால் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்த அவர்களை வரவேற்ற மீன்வளத்துறை அதிகாரிகள், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் ஏற்றி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com