முதலமைச்சரை சந்தித்த போது - நாடக காதல் தொடர்பாக இப்போது பேச விரும்பவில்லை பாமக பேச்சு

முதலமைச்சரை சந்தித்த போது - நாடக காதல் தொடர்பாக இப்போது பேச விரும்பவில்லை  பாமக பேச்சு

முதலமைச்சரை சந்தித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தல்

வன்னியர் உள் ஒதுக்கீட்டால் பிற சமூகத்தினருக்கு பாதிப்பு இல்லை என்றும் தமிழகத்தில் அரசுப்பணிகளில் இருப்போரின் சாதிவாரியான எண்ணிக்கை குறித்த தரவுகளை வெளியிடவும் அன்புமணி வலியுறுத்தினார். காவல்துறை அனுமதி பெறப்பட்டு வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவுப்பெருவிழா நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அன்புமணி பேட்டி.

7.5%  உச்ச நீதிமன்றம் தடை

வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து முதல்வரை கூட்டாக இன்று சந்தித்தோம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கான 10.5 , சீர் மரபினருக்கு 2.5, இதர பிறப்படுத்தப்பட்டோருக்கு 7 விழுக்காடு வழங்கப்பட்ட  இட ஒதுக்கீட்டை கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம்  தடை செய்தது. 

தமிழ்நாடு அரசின் அரசாணை

அதன்பிறகு கடந்த ஆண்டு தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மீண்டும் உருவாக்கினர். வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  அதன்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூன்று மாதத்தில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான தரவுகளை சேகரித்து தமிழக அரசுக்கு பரிந்துரையாக  வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதை விரைவுபடுத்தி இந்தக் கல்வியாண்டுக்குள் வன்னியர் உள் ஒதுக்கீட்பை வழங்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினோம்.

இந்த கல்வி ஆண்டில் வழங்கவேண்டும் 

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு  வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த கல்வி ஆண்டுக்கு முன்பாக வன்னியர் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் தலித் மற்றும் வன்னியர் சமூகத்தினர் 40 விழுக்காடு இருக்கின்றனர், இரண்டு சமூகமும் பின் தங்கியுள்ளனர். இரண்டு சமூகமும் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும். வன்னியர் தனி இட ஒதுக்கீட்டால் பிற சமூகங்களுக்கு பாதிப்பு கிடையாது , சீர் மரபினர் உட்பட யாருக்கும் எதிரானது கிடையாது. . 

அதிமுக முறையாகவே வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றியது. வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு விழா நிகழ்ச்சி நடத்துவது குறித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். காவல்துறை அனுமதி வழங்கினால் சித்திரை முழு நிலவு விழா நடைபெறும். நாடகக் காதல் தொடர்பாக இப்போது பேச நான் விரும்பவில்லை என்றார். 

வன்னியர் உட்பட அனைத்து சாதிகளுக்கும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கும் ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு எனவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான  இட ஒதுக்கீட்டில் எங்களுக்கு உடந்தை கிடையாது , அதில் தாழ்த்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோர் ஏன் சேர்க்கப்படவில்லை?  என கூறினர்.