மீன் பிடிக்க சென்ற 13 வயது சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு

மீன் பிடிக்க சென்ற 13 வயது சிறுமி  குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு

சென்னை கொரட்டூர் மாதனாங்குப்பம் பகுதியில் 13 வயது சிறுமி மீன் பிடிப்பதற்காக சென்று குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் மாதனாங்குப்பம் பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்ற கேரளா ஆலப்புழா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகள் 13 வயது கீர்த்தனா இவர் பாடி புதுநகரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்க்கு வந்து இருந்ததும் பொழுதுபோக்குக்காக அருகில் இருக்கக்கூடிய குளத்தில் மீன் பிடிப்பதற்காக சென்று உள்ள சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் வீட்டில் இருந்த அவரது பெரியம்மா சென்று பார்த்த பொழுது மகளை காணவில்லை என அதிர்ச்சி அடைந்தார் இந்த நிலையில் அவர் பயன்படுத்திய மீன் தூண்டில் அங்கே இருந்ததால் பயந்து போய் கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்த பொழுது அவர் குளத்தில் விழுந்து இருப்பதை கண்டு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு வந்த அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் தவறி விழுந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்க்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.