குடிபோதைக்கு அடிமையான மகன் குடும்பத்தோடு சேர்ந்து அடித்தே கொலை உண்மையை மறைக்க நாடகம் !!!!

குடிபோதைக்கு அடிமையான மகன் குடும்பத்தோடு சேர்ந்து அடித்தே  கொலை உண்மையை மறைக்க நாடகம் !!!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள உவரி கிராமத்தில் தாய் தந்தை மற்றும் மூத்த மகன் ஒன்றாக சேர்ந்து இரண்டாவது மகனை கண்டிக்க நினைத்து அடித்ததில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள உவரி கிராமத்தில் சப்பானி என்ற தவிடன் - காளியம்மாள் தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர், இதில் மூன்று பெண்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர், மேலும் மூத்த மகன் சங்கனுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி தனது மனைவியுடன் கரிசல்காலம்பட்டியில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் சரவணன் மட்டும் பெற்றோருடன் குடியிருந்து வருகிறார். சரவணன் கடந்த சில வருடங்களாகவே போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார் குடிப்பதற்கு தனது தாய் மட்டும் தந்தையிடமே பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார், இதனை தாய் மற்றும் தந்தை  குடும்பத்தார் அவ்வப்போது கண்டித்து வந்துள்ளனர்.  ஆனாலும் சரவணன் திருந்தாமல் தொடர்ந்து குடிப்பதற்காக தனது தாயை கொடுமைப்படுத்தி பணம் கேட்டு பல முறை தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் குடிப்பதற்காக தான் மேய்க்கும் செம்மறி ஆடுகளை தூக்கிக் கொண்டு போய் விற்று குடித்து வந்துள்ளார்.

மேலும் படிக்க | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதைப் பார்த்தாலும் பயம் - அண்ணாமலை விமர்சனம்!

இந்த நிலையில் நேற்று போதையில் இருந்த சரவணன் மேலும் குடிப்பதற்காக தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் இதனை  தாய் மற்றும் தந்தை இருவரும் சேர்ந்து தனது மூத்த மகன் சங்கனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் சங்கனும் உடனடியாக வீட்டிற்கு வந்துள்ளார், தொடர்ந்து சரவணன் பணம் கேட்டு மூவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் குடும்பத்தார் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சரவணன் ஆடு மேய்க்கும் கம்பால் மூவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார், தாக்கிய சரவணனை மூத்த மகன் சங்கனும் தந்தை தவிடனும் சேர்ந்து கைகளை இறுக பிடித்துக் கொண்டனர், தாய் காளியம்மாள் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு வந்து கைகளை பின்னால் மடித்து கட்டி வைத்துள்ளனர், தொடர்ந்து போதையில் இருந்த சரவணன் குடும்பத்தாரை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளார் இதனால் ஆத்திரம் அடைந்த மூத்த மகன் சங்கன் ஆடு மேய்க்க வைத்திருந்த கம்பை எடுத்து கால் மற்றும் தலையில் தாக்கியுள்ளார், மேலும் தந்தை தவிடனும் மற்றும் தாய் காளியம்மாள் இருவரும் இரும்பு பைப்பால் தலைப்பகுதியில் தாக்கியுள்ளனர் இதில் சரவணன் மயக்கமடைந்ததாக எண்ணி மூவரும் தூங்க சென்று விட்டனர்.

மேலும் படிக்க | பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம், பெண்ணுரிமை காப்போம்; முதலமைச்சர் வாழ்த்து

தொடர்ந்து காலையில் எழுந்து வந்து தாய் காளியம்மாள் தனது மகன் சரவணனை எழுப்ப முயற்சி செய்துள்ளார் அப்போது அவர்கள் தாக்கியதில் சரவணன் இறந்து விட்டதாக தெரிய வந்தது இதில் பயந்து போன மூவரும் ஊர்க்காரர்களிடம் தனது மகன் போதையில் யாரிடமோ சண்டையிட்டு அடி வாங்கி வந்து வீட்டு வாசலில் இறந்து விட்டதாக கூறி நம்ப வைத்துள்ளார்கள் தொடர்ந்து தனது மகன் சரவணனின் உடலை சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த மகள்கள் மூவரிடமும் நடந்ததை கூறியுள்ளனர் நீங்கள் செய்தது தவறு என்றும் உடனே சென்று போலீசில் சரணடையுங்கள் என்றும் கூறியுள்ளனர் காவல் நிலையத்திற்கு செல்ல பயந்து கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று நடந்ததை அனைத்தையும் கூறியுள்ளார்கள், இந்த தகவலை வில்லூர் காவல் நிலையத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார் தகவலின் பெயரில் உவரி கிராமத்திற்கு சென்று சம்பவ இடத்தை நேரில் பார்த்து தாய் காளியம்மாள் தந்தை தவிடன் என்ற சப்பாணி மற்றும் மூத்த மகன் சங்கன் ஆகிய மூவரையும் கைது செய்து வில்லூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.