பாஜக.வினர் கைது: ஆய்வு செய்ய குழு அமைப்பு..!

பாஜக.வினர்  கைது:   ஆய்வு செய்ய குழு அமைப்பு..!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த பனையூரில் பாஜக மாநில தலைவா் அண்ணாமலையின் வீட்டு முன் நடப்பட்ட கட்சி கொடி கம்பத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசாா் கைது செய்தனா். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு பாஜகவை வெறுப்புணர்வுடன் கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக தொண்டர்கள் மாநில அரசால் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சதானந்த கவுடா, சத்ய பால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி.மோகன் ஆகியோர் கொண்ட குழு தமிழ்நாட்டை பார்வையிட்டு விரைவில் அறிக்கை அளிக்க உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com