''தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற முடியாது'' தயாநிதி மாறன் பேட்டி!

''தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற முடியாது'' தயாநிதி மாறன் பேட்டி!

தமிழகத்தில் எங்குபோட்டியிட்டாலும் எந்த தொகுதியிலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை தங்கசாலை முதல் என் எஸ்சிபோஸ் ரோடுவரை உள்ள பகுதி மற்றும் முத்தியால்பேட்டை பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க  சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் திட்டத்திற்கான பணி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை காலங்களில் மழை நீர் தேங்காத வண்ணம் வடிகால்வாய் பணிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், சென்னையில் இது போன்று ஒரு சில இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டள்ளாதகவும், அமைச்சர் சேகர்பாபுவின் முயற்சியால் வால்டாக்ஸ் சாலையில் தொடங்கப்பட்டது போலவே தற்போது, இங்கு மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பின்னர் தமிழகத்தில் இராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்ற தகவல் பரவி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த தயாநிதி மாறன், இந்தியா முழுவதும் மக்களை பாதிக்கின்ற வகையில் பெட்ரோல் விலை மற்ற பொருட்களின் விலையை பாஜக அரசு உயர்த்தி இருப்பதால் நாடு முழுவதும் மத்திய அரசிற்கு எதிர்ப்பு உள்ள நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற முடியாது என பதலளித்த அவர் தமிழகத்தில் முதல்வரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதால், தமிழகத்தில் எங்கும் பாஜகவால் வெற்றி பெறமுடியாது என்று கூறினார்.

இதையும் படிக்க:ராகுலுக்கு உயர்நீதிமன்றம் வைத்த செக் ..! ஆட்டிப்படைக்கும் அரசியல் காய்கள்...!