மறைந்த திமுக மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசுவின் உருவப்படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

மறைந்த திமுக மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசுவின் உருவப்படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

மறைந்த திமுக மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசுவின் உருவப்படத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளை உள்ளடக்கிய 122வது வார்டு திமுக கவுன்சிலர் ஷீபா வாசு, உடல்நலக்குறைவால் கடந்த வாரம் உயிரிழந்தார்.

இதையும் படிக்க : இனி திருப்பதியில் லட்டு வழங்குவதில் புதிய உத்தரவு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

இதுதொடர்பாக முன்பே இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், மக்கள் பணியாளராகவும் கட்சியின் செயல்வீரராகவும் முன்களத்தில் பணியாற்றியவர் ஷீபா வாசு என்று புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மறைந்த திமுக மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசுவின் உருவப்படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.