உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை, உலக அளவில் 68 கோடியே 53 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இதுகுறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68 கோடியே 53 லட்சம் என அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 68 லட்சத்து 41 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார மையம், தற்போது உலகம் முழுவதும் 2 லட்சத்து 4 ஆயிரத்திற்குடம் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

இதையும் படிக்க:   “அவர்களை சிறைக்கு அனுப்பினால் தமிழ்நாடு மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள்....”ஜெயக்குமார்!!