பழனி முருகன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை முடிந்தது..! வெளிநாட்டு கரன்ஸிகள் காணிக்கை...!
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி, இம்மாதம் பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக 26 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
தற்போது, பள்ளி,கல்லூரி விடுமுறை என்பதால் உண்டியல் எண்ணும் பணிக்கு மாணவர்கள் இல்லாத்தால் குறைந்த அளவிளான உண்டியல்களே எண்ணப்படுள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக 26 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
இதையடுத்து, நேற்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 54 லட்டச்சத்து 36ஆயிரத்து 192 ரூபாய் கிடைத்துள்ளது. தங்கம் 45 கிராமும், வெள்ளி18,965 கிராமும், வெளிநாட்டு கரன்சி 76 நோட்டுகளும் கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இதையும் படிக்க | முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம்...எங்கெங்கு என்னென்ன ஒப்பந்தங்கள் ?
மேலும், உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரி பணியாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் ,பள்ளி,கல்லூரி விடுமுறை என்பதால் உண்டியல் எண்ணும் பணிக்கு மாணவர்கள் இல்லாத்தால் குறைந்த அளவிளான உண்டியல்களே எண்ணப்படுள்ளது.
இதையும் படிக்க | வெளிநாடு பயணத்திற்காக புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னது என்ன?