50 வருடங்களாக வசித்து வரும் வீடுகளை இடிக்கும் பணி.... எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்!!

50 வருடங்களாக வசித்து வரும் வீடுகளை இடிக்கும் பணி.... எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்!!

50 வருடங்களாக வசித்து வரும் 41 குடும்பங்களை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு ஐந்து ஜேசிபி எந்திரம் மூலம் வீடுகளை இடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுநல வழக்கு:

திருவண்ணாமலை மாவட்டம்  நார்த்தாம்பூண்டி கிராமத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் இருளர் இன மக்கள், இஸ்லாமியர்கள், அகமுடையார்கள் என 41 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 50 வருடங்களாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.  

இந்நிலையில் தனிநபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதாக வழக்கு தொடர்ந்ததை அடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி.மந்தாகினி முன்னிலையில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் குமார் மற்றும் குணசேகரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு 5 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

குடியிருப்பு மக்கள்:

வருவாய்த்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்கள்  அவரவர் வீட்டுக்குள் கதவை சாத்திக்கொண்டு வெளியே வராமல் இருப்பதால் பரபரப்பு காணப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் மின்சாரத்துறை ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்த பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படிக்க:   வரலாற்று சிறப்புமிக்க பணியில் ஈடுபட்டுள்ளேன்... ராகுல் காந்தி!!