"பாஜக குறித்து பொது வெளியில் பேசக் கூடாது" அதிமுக தலைமை உத்தரவு!

Published on

கூட்டணி குறித்தோ பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க கூடாது  என மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. 

பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக ஏற்கனவே தனது நிலைப்பாட்டை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில், வேறு யாரும் பொது வெளியில் பேசக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 

கட்சி நிர்வாகிகள் பொது வெளியில் கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பேசினால் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் மாவட்ட செயலாளர்கள் மூலம் அனைத்து அமைப்பு நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் பாஜகவிற்கு எதிராக போஸ்டர் ஒட்டுவது மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பதையும் தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com