சேப்பாக்க மைதானத்தை ரசிகர்கள் தூய்மையாக வைத்திருக்க கோரிக்கை...!!

சேப்பாக்க மைதானத்தை ரசிகர்கள் தூய்மையாக வைத்திருக்க கோரிக்கை...!!

சேப்பாக்க மைதானத்தை ரசிகர்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

சென்னையில் சிஎஸ்கே - இராஜஸ்தான் இராயல்ஸ் இரு அணிகளும் மோதின.  இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்து ஆட்டத்தைக் கண்டுகளித்தனர்.  இதனால் உற்பத்தியாகும் குப்பைகளை அகற்ற கூடுதல் தூய்மை பணியாளர்களை சென்னை மாநாகராட்சி நியமித்துள்ளது. 

மைதானத்திற்குள்ளே உள்ள இருக்கைக்கு இடையில் உள்ள குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.  குறிப்பாக பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், குளிர்பான பாட்டில், பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தியுள்ளனர்.  மேலும் மைதானத்தை சுற்றி பச்சை, நீலம் என இரண்டு நிற குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. 

நேற்றைய ஆட்டத்தின்போது ஒலி பெருக்கி மூலம் தொடர்ச்சியாக ரசிகர்களை மைதானத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   சென்னை விமானநிலையத்தில்... கால் கட்டுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்...!!!