இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது...! இஸ்ரோவின் சி-55 ராக்கெட்...!!

 இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது...! இஸ்ரோவின் சி-55 ராக்கெட்...!!

சிங்கப்பூர் செயற்கைக்கோளை ஏவுவதற்காக இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் பாய இருக்கிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மூலம் காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது. 

அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த டெலியோஸ்-2  புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  இந்நிலையில், டெலியோஸ்-2 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. PSLV-C55: 750 கிலோ எடை.. சிங்கப்பூர் செயற்கைக்கோளை ஏப்.22ம் தேதி விண்ணில்  செலுத்துகிறது இஸ்ரோ! - Dinasuvadu Tamil

750 கிலோ எடை கொண்ட இந்த டெலியோஸ்-2 செயற்கைக்கோள் மூலம் புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும் எனவும் ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.