இன்ஸ்டா காதலியிடம் ரூ.1.30 லட்சம் மோசடி... காதலன் கைது!!

இன்ஸ்டா காதலியிடம் ரூ.1.30 லட்சம் மோசடி... காதலன் கைது!!

சென்னையில் இன்ஸ்டா மூலம் பழகி பெண்ணிடம் பணம் பறித்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.  

ராயபுரம் பகுதியை சேர்ந்த ருக்‌ஷனா, பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார்.  நாளடைவில் இருவரும் இன்ஸ்டா மூலம் காதலித்து வந்த நிலையில், மகேஷ் ருக்‌ஷனாவிடம் இருந்து குடும்ப வறுமை எனக் கூறி, 20-க்கும் மேற்பட்ட முறை, கிட்டத்தட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் பறித்துள்ளார். 

சிறிது நாட்கள் கழித்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட ருக்‌ஷனா, காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பாண்டியன் என்ற பெயரில் ருக்‌ஷனாவை ஏமாற்றி வந்த மகேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க:   சந்திரமுகி2 படத்தளத்தில் வடிவேலுவுக்கும் பி.வாசுவுக்கும் இடையே மோதல்... காரணம் என்ன?!!