"இனி அடுத்தடுத்து அதிமுக-விற்கு வெற்றி தான்" திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!!

"இனி அடுத்தடுத்து அதிமுக-விற்கு வெற்றி தான்" திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!!

அதிமுக மாநாடு வெற்றி பெற்றது போல் இனிவரும் அடுத்தடுத்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் மாநாடு வெற்றி பெற்றதை யடுத்து மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் பதினெட்டாம் படி கருப்பு சாமிக்கு சந்தன காப்பு செலுத்தியும் பழமுதிர்ச்சோலை முருகனுக்கு தங்கத்தேர் இழுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தியுள்ளார் திருப்பரங்குன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா.

இதில் முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜ் ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்பு பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "அதிமுக மாநாடு மதுரை மாநகரில் நடந்து வரலாறு காணாத வெற்றி பெற்றிருக்கிறது. ஒற்றை தலைமை கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம் " எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், " மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அது போலவே வருகிற நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை காண்போம். இனி அடுத்தடுத்து அதிமுகவிற்கு வெற்றியே" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com