எனக்கு நிதி அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறேன்...!!!
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் , சென்னை கோட்டூர்புரத்தில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,
அமைச்சரவை மாற்றம் குறித்த பரிந்துரைக்காக ஆளுநர் மாளிகைக்கு சென்றால் ஊடகங்களுக்கு சொல்லிவிட்டுத்தான் செல்வேன் என்று கூறினார். மேலும் அமைச்சரவை மாற்றத்திற்கான தேவை தற்போது இருக்கிறதா என்பதை முதலமைச்சர்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
மேலும் ஆளுநர் மாளிகைக்கு சென்றால் சொல்லிவிட்டுத்தான் செல்வேன் எனவும் அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு தெரியாது எனவும் தனக்குகீழே பணி செய்வோரை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிக்க முதலமைச்சருக்கு அதிகாரம் உண்டு எனவும் ஆனால் அது நடக்குமா என்பது உங்களுக்கு தெரிந்த அளவுதான் எனக்கும் தெரியும் எனவும் தெரிவித்தார்.
இன்று தலைமைச் செயலகம் சென்று வந்த பிறகு முதலமைச்சரை சந்திக்க தொடர்பு கொண்டேன் எனவும் ஆனால் முதலமைச்சருக்கு கால் வலி என்பதால் ஓய்வு எடுப்பதாகவும் கூறியதாக தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்.
மேலும் நிதி அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன் எனவும் நான் துணை முதலமைச்சராக வந்தால் நல்லதுதான் எனவும் தெரிவித்த அவர் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடந்தால் போவேன் எனவும் கூறினார்.
இதையும் படிக்க: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு...சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு...!