மின்வாரிய ஊழியர்கள் தேர்வு இனி மின் வாரியம் மூலமாகவா?!!.... 

மின்வாரிய ஊழியர்கள் தேர்வு இனி மின் வாரியம் மூலமாகவா?!!.... 

சென்னையில், ஊதிய உயர்வு தொடர்பாக மின் வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. 

தொடரும் இழுபறி:

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.   ஆனால், இன்னும் வழங்கப்படாததால் விரைந்து வழங்குமாறு தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.   இதையடுத்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மின்வாரிய நிதிப் பிரிவு இயக்குநர் சுந்தரவதனன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.   ஆனால்,  பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

கோரிக்கைகள்:

இந்த நிலையில், 19 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் பகல் 12:00 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.  தொழிற்சங்கங்கள் தரப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பதை ரத்து செய்துவிட்டு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்வாரிய ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்யாமல், மின் வாரியம் மூலமாகவே தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  வெற்றிமாறன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு...!!!