"ராகுல் காந்தி மோடி சமுதாயத்தை குறித்து அவதூறாக பேசியதை போல்........." - பசவராஜ் பொம்மை

"ராகுல் காந்தி மோடி சமுதாயத்தை குறித்து அவதூறாக பேசியதை போல்........."  - பசவராஜ் பொம்மை

கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சித்திராமையா லிங்காயத் சமூகத்தையே ஊழல் சமூகமாக விமர்சிப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு வைத்துள்ளார். 

கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜக அரசுக்கு எதிராக 40 சதவீதம் கமிஷன் அரசு என ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி  தீவிர பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. ஒப்பந்தங்களை பெற பசவராஜ் பொம்மைக்கு நேரடியாக 40 சதவீதம் கமிஷன் செலுத்துங்கள் என க்யூ ஆர் கோடு வடிவில் முதல்வர் படத்தை அச்சிட்டு மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் செய்தது. 

முதல்வர் பசவராஜ் பொம்மை ஊழல் குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா மிகக் கடுமையான விமர்சனங்களை முன்னெடுத்து தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சித்ராமையா என்னை மட்டும் ஊழல்வாதி எனக் கூறி இழிவு படுத்தாமல் என் லிங்காயத் சமூகத்தையே சித்திராமையா ஊழல் சமூகமாக விமர்சிப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம் சாட்டியுள்ளார். மேலும், "ராகுல் காந்தி மோடி சமுதாயத்தை குறித்து அவதூறாக பேசியதை போல் தற்பொழுது சித்தராமையா லிங்காயத் சமூகத்தை தவறாக பேசியுள்ளார்", என்வும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்து பேசியுள்ள சித்திராமையா, தான் முதல்வர் ஊழல் குறித்து மட்டுமே விமர்சனம் செய்து வருவதாகவும் ஆனால் லிங்காயத் வகுப்பை குறித்து எங்கும் தான் தவறாக பேசவில்லை என்றும் தனக்கு லிங்காயத் குறித்து பெரும் மதிப்பு உள்ளது என்றும், லிங்காயத் வகுப்பில் இதற்கு முன்பு பலர் உண்மையான முதல்வர்கள் ஆக பணியாற்றி உள்ளதாகவும், தான் அவ்வாறு கூறவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். தேர்தல் சமயத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெற பாஜக இவ்வாறான தவறான குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com