சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் திணறல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் திணறல்

கன்னியாகுமரி கடற்கரைக்கு பெண்களுக்கான உடை மாற்றும் அறை திறக்கப்படாமல் உள்ளாதல் அவதி- மாவட்ட நிர்வாகம் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் வேண்டுகோள்.


சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினசரி 1,000-க்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர்,உள்ளூர்,வெளியூர்,வெளி மாநிலம்,வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்,இவர்கள் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம்,133 அடி உயரம்கொண்ட அய்யன் வள்ளுவரின் சிலை ஆகியவற்றை படகு சவாரி மூலம் கடலில் சென்று இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த சைக்கிளை திருடும் வாலிபர்-இரவு நேரத்தில் மதில் சுவரில் ஏரி குதித்து சைக்கிளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது-போலீசார் விசாரணை

மேலும் படிக்க | கும்பகோணம் அருகே பாஜக நிர்வாகி வீட்டில்.... ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள  புன்னைநகரை சேர்ந்தவர்.ராஜு இவர் தனது பையனுக்கு ரூ 15,000 மதிப்புள்ள மிதிவண்டியை கடந்த சில தினங்களுக்கு முன்பு வாங்கி கொடுத்துள்ளார்,
இந்த சைக்கிளை அவரது வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்றுள்ளார்,பின்னர் மறுநாள்  காலையில் வந்து பார்த்தபோது சைக்கிள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது,பின்பு அவர் தன் வீட்டில் வைத்திருந்த சிசிடிவி கேமராவை பார்க்கும் பொழுது வாலிபர் ஒருவர் அங்கும் இங்குமாக பார்த்துக் கொண்டு காம்பவுண்ட் மதில் சுவரில் ஏறி குதித்து சைக்கிளை தூக்கிச் செல்லும் காட்சியை அதில் பதிவாகி இருந்தது இதை பார்த்த வீட்டு உரிமையாளர் உடனடியாக அருகே உள்ள நேசமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர்.