திமுக ஆட்சியில் தான் என உறுதிப்பட தெரிவித்த அமைச்சர் பொன்முடி....!!

திமுக ஆட்சியில் தான் என உறுதிப்பட தெரிவித்த அமைச்சர் பொன்முடி....!!

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, 35 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தான் கல்வி மேம்பட்டதாக கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அதிமுக ஆட்சியில் தான் கல்வி வளர்ந்ததாக கூறுகிறார்கள், ஆனால் உண்மையிலேயே ஆரம்பக் கல்விக்கு ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி இருக்க வேண்டும் என்று கொண்டு வந்தது காமராஜர் தான் என்றும், அதை 3 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி இருக்க வேண்டும் என்றும் அறிவித்தவர் கருணாநிதி தான் எனவும் தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்று கூறியவர் கருணாநிதி தான் என குறிப்பிட்டு பேசிய அவர், உயர்கல்வி என்று கூறினாலே திமுக  ஆட்சி தான் என்றும், இரு மொழிக் கொள்கையில் தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு தனி சலுகைகள் அளித்ததும் திமுக தான் எனவும், உயர்கல்வித்துறை வளர்ச்சி என்பது திமுக ஆட்சியில் தான் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

இதையும் படிக்க:   கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்.... காரணம் என்ன?!!