ரூ.10 கோடி மதிப்பிலான பணிகள்... பார்வையிட்ட அமைச்சர்கள்!!

ரூ.10 கோடி மதிப்பிலான பணிகள்... பார்வையிட்ட அமைச்சர்கள்!!

ஆலந்தூர் புதுதெருவில் சிஎம்டிஏ நிதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருமண மண்டப பணியை அமைச்சர் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்துள்ளனர்.

ஆலந்தூர் 12 வது மண்டலம் 160 வது வார்டுக்கு உட்பட்ட புதுத்தெருவில் ஏற்கனவே இயங்கி வந்த நீதிமன்ற கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதி உதவியுடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. 

இதற்கான ஆய்வு பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மற்றும்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சூல்மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் திருமண மண்டப வரைபடத்தினை காண்பித்து விளக்கமளித்தனர். ஆய்வுக்கு பின் அமைச்சர் சேகர்பாபு கூறும்போது 3 மாதத்தில்  இந்த திருமணமண்டப பணிகள் துவங்கும் என்றும் குறிப்பிட்ட காலகெடுக்குள் மண்டபம் கட்டிமுடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் ஜூன்5ல் போராட்டம்... தூய்மை பணியாளர்கள்!!