நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு..நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்!

நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு..நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்!

திருப்பூர், கிருஷ்ணகிரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் பகுதியை சேர்ந்த இனியவன் மற்றும் சந்துரு ஆகிய இரு சிறுவர்கள் ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதையும் படிக்க : புதிய நீச்சல் குளத்தில் உற்சாகமாக துள்ளி குதித்து விளையாடிய பார்வதி...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இதேப்போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை சேர்ந்த செல்வன் மற்றும் வினோத் ஆகிய இருவரும் ஏரியில் குளித்த போது உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறுவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.