எண்ணும், எழுத்தும்... தொடங்கி வைத்த அமைச்சர்..!!

எண்ணும், எழுத்தும்... தொடங்கி வைத்த அமைச்சர்..!!

திருப்பத்தூா் மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும் திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்துள்ளாா். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்து, எண்ணும் எழுத்தும் திட்டத்தை அமைச்சா் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் பின்னர் மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுடன் கலந்துரையாடினாா்.  

தொடர்ந்து  அவா் எண்ணும், எழுத்தும் திட்ட பதாகையில் கையெழுத்திட்டாா்.  பின்னா் மொழிகள் ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சா் அன்பில் மகேஷ் எண்ணும், எழுத்தும் பரப்புரை வாகனத்தை கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.  அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் பாஸ்கர பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜி(ஜோலார்பேட்டை), வில்வநாதன்(ஆம்பூர்), நல்லதம்பி(திருப்பத்தூர்)ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதற்கு முன்னதாக சென்னையில் இருந்து ரயில் மூலம் ஆம்பூருக்கு வருகை தந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜி, வில்வநாதன், நல்லதம்பி, நகர மன்ற தலைவர்கள் எஜாஸ் அஹமத், உமாபாய் சிவாஜி கணேசன், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிக்க:   திருச்சி சிவாவிடம் சமாதானம் செய்தாரா அமைச்சர் கே. என். நேரு....?!