கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகள்... லஞ்சம் கேட்கும் ஆடியோ!!

கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகள்... லஞ்சம் கேட்கும் ஆடியோ!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது.  இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களிடம் வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் ஃபோன் செய்து தனக்கு சேர வேண்டிய மாமூலை கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகளே மணல் கொள்ளையர்களுடன் கைகோர்த்து லஞ்சம் பெற்றுக் கொண்டு மணல் கடத்தலை ஊக்குவிக்கும் சம்பவம் இனியும் தொடரக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:   80 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ஜப்பானிய கப்பல்....!!!