முதல்வரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு ...... பெண்களுக்கான மருத்துவ முகாம்..! - மேயர் தொடங்கி வைத்தார்.

முதல்வரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு ...... பெண்களுக்கான மருத்துவ முகாம்..!  - மேயர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினின்  70வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மேற்கு மாவட்டம் சார்பில்  110-வார்டு புஷ்பா நகரில் பெண்களுக்கான மருத்துவ முகாம் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலினின்  70வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் பெண்களுக்கான மருத்து முகாம் 110 வார்டு புஷ்பா நகரில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த  பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பணிகள் நிலைக்குழுத்தலைவருமான சிற்றரசு பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமான பெண்களும் கலந்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாமன்ற உறுப்பினர் சிற்றரசு கூறுகையில்,..... 
தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மார்பக புற்றுநோய் மற்றும், கருப்பை புற்றுநோய்க்கு  பரிசோதனை செய்யும் மருத்துவ முகாம் காவேரி மருத்துவமனையுடன் இணைந்து நடைபெறுவதாகவும், சாதாரணமாக இந்த மருத்துவ சிகிச்சைகள் செய்ய  4000 ரூ வரை செலவாகும் எனவும், இந்த முகாமில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள், அடித்தட்டு மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், மூன்று நாட்கள் மருத்துவமுகாம் நடைபெறவுள்ளதாகவும், மேல் சிகிச்சை மற்றும், அறுவை சிகிச்சைக்கான  தேவை இருப்பின் அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

 இதையும் படிக்க   } தமிழ்நாடு காவல்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு..!