ஒரே புகைப்படம்... 5000 சிம் கார்டுகள்...!!

ஒரே புகைப்படம்... 5000 சிம் கார்டுகள்...!!
Published on
Updated on
1 min read

ஒரே நபரின் புகைப்பட அடையாளத்தை வைத்து தமிழ்நாட்டில் 5000 செல்போன் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு நபரின் புகைப்படத்தை வைத்து பல சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் சுமார் 5000 செல்போன் எண்கள் இதேபோன்று பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.   ஒரே ஒரு புகைப்பட அடையாளத்தை வைத்து பல சிம் கார்டுகள் வழங்கப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் ஈடுபட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் மீது கைது நடவடிக்கையும் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  இதேபோல் சைபர் கிரைம் குற்றங்களில  ஈடுபட்டதாக  தமிழ்நாட்டில் 20,000 செல்போன் எண்களை முடக்க சைபர் கிரைம் போலீசா நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.   இதில் தற்போது வரை ஏழு நாட்களில் 9,500 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  இன்றைய நாள்வரை 19654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com