மீண்டும் இணையும் பா.ரஞ்சித் மற்றும் அட்டகத்தி தினேஷ்!!

மீண்டும் இணையும் பா.ரஞ்சித் மற்றும் அட்டகத்தி தினேஷ்!!

இயக்குனா் பா.ரஞ்சித்துடன் மீண்டும் அட்டகத்தி தினேஷ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா ரஞ்சித், கடந்த 2012 ல் வெளியான "அட்டகத்தி" என்னும் படத்தின் மூலம், தனது பெயரை நிலைநிறுத்தியவர். அப்படத்தில், தினேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த இருவரின் கூட்டணியும், எதார்த்தமான ஒரு கல்லூரி மாணவரின் வாழ்க்கையை தத்ரூபமாக வெளிக்காட்டியிருந்தனர். இந்த படம் பிரமாண்டமான வெற்றிப் பெற்றதையடுத்து, தினேஷின் பெயர் அட்டகத்தி தினேஷ் என்ற மாறியது.

அதன் பின்னர், தினேஷ் தனது ஒவ்வொரு படங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது, ஜே பேபி, தண்டகாரண்யம் படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் கருப்பு பல்ஸர், லப்பர் பந்து படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இப்படங்களில், நடிகர் அட்டகத்தி தினேஷ் வித்தியாசமான புதிய லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இயக்குனா் பா.ரஞ்சித்துடன் மீண்டும் அட்டகத்தி தினேஷ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்த படத்தின் கதை எவ்வாறு அமையப்போகிறது என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிக்க || உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்தவர் கைது!!