அரசு ஊழியர்களின் சொத்து பட்டியல்; அரசின் கொள்கை முடிவு!!

அரசு ஊழியர்களின் சொத்து பட்டியல்; அரசின் கொள்கை முடிவு!!

அரசு ஊழியர்களின் சொத்து பட்டியல்களை இணையதளத்தில் வெளியிடுவது என்பது அரசின் கொள்கை முடிவுற்கு உற்பட்டது என தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்களை தடுக்கும் விதமாக அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து விவரங்களை ஆண்டு தோறும் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை  விசாரித்த, உயர்நீதிமன்றம் ஆண்டுதோறும் அரசு ஊழியர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட முடியுமா? என்று அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பியது.

இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக  அரசு தரப்பில் அரசு பிளீடர், அரசு ஊழியர்கள் பணி ஒழுக்க விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்கின்றனர். ஆனால், அதை இணையதளங்களில் வெளியிடுவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உற்பட்டது என கூறியுள்ளார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க || திமுக பிரமுகர் வீட்டில் ED சோதனை நிறைவு... கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!!