"2024-ல் பிரதமர் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்" பொன்.ராதாகிருஷ்ணன் விருப்பம்!

"2024-ல் பிரதமர் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்" பொன்.ராதாகிருஷ்ணன் விருப்பம்!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டம் புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பிரதமர் மோடி இந்தியாவில்  545 தொகுதியில் எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவார். தமிழ்நாட்டில் அவர் போட்டியிட்டால் அது தமிழகத்திற்கு பெருமை என்றும்,
அவரை இங்குதான் போட்டியிட வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. பிரதமர் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை அவரே முடிவு செய்ய முடியாது. அதனை கட்சிதான் முடிவு செய்யும் அதுவே உட்கட்சி ஜனநாயகம். அவர் தமிழகத்தில் உள்ள 39 தொகுதியில் ஏதேனும் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் ஆசை என தெரிவித்தார்.

மேலும் சிதம்பரம் கனகசபை பிரச்சனை தேவையற்ற ஒன்று என்றும், இதனை பேசி தீர்த்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த அவர், தமிழக ஆளுநர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் இல்லை என்றும் அவர் திமுகவுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com