"வரலாற்றை மாற்றியெழுத முயற்சிக்கும் பாஜகவை மக்கள் தூக்கி எறிவர்" ராகுல்காந்தி!!

"வரலாற்றை மாற்றியெழுத முயற்சிக்கும் பாஜகவை மக்கள் தூக்கி எறிவர்" ராகுல்காந்தி!!

தேசத்தின் வரலாற்றை மாற்றியெழுத முயற்சிக்கும் பாஜகவை மக்கள் தூக்கியெறிவர் என பாரத் சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். 

ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, பிரான்சின் பாரீஸ் பல்கலைக்கழகத்தில் பேட்டியளித்துள்ளார். அப்போது நாட்டின் பெயரை மாற்றுவதன் மூலம் வரலாற்றை மாற்ற பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவில் பாஜகவினரால் சிறுபான்மையினர் இழிவாக நடத்தப்படுவதாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார்.  

மேலும், ஆதிக்கம்-அதிகாரத்திற்காக பாஜக எந்த உச்சத்திற்கும் செல்லும் எனவும் எதிர்கட்சியினரின் கூட்டணியால் இந்தியா என்ற பெயர் மீது பாஜக ஆத்திரம் கொண்டுள்ளதாகவும் ராகுல் விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க || "விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும்" விஷால் அறிவிப்பு!!