பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்தது சிறந்த முடிவு...தமிழக அரசின் வரவேற்பை வரவேற்ற ராமதாஸ்!

பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்தது சிறந்த முடிவு...தமிழக அரசின் வரவேற்பை வரவேற்ற ராமதாஸ்!

கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காக்க பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது சிறந்த முடிவு என  பாமக. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். 

பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். கோடை வெயிலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காக்க பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது சிறந்த முடிவு என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க : பள்ளிகள் திறப்பு தேதியில் அதிரடி மாற்றம்...மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெப்பத்தின் கடுமை இன்னும் தணியாததை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள்  வரும் ஜூன் 7-ஆம் நாள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைப்பதால், 
வெப்பம் தணியும் வரை பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கடந்த 23-ஆம் தேதி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.