" கேமராக்கள் இல்லை என்பதால் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என சொல்வது அதிகபட்சமான செயல்" - மா.சுப்பிரமணியன் .

அடுத்த ஆண்டு தேர்தலை மனதில் வைத்து ஆணையங்களை அனுப்பி பூதக்கண்ணாடி வைத்து குற்றம் கண்டுபிடிக்க நினைக்கிறார்கள்...

" கேமராக்கள் இல்லை என்பதால்  அங்கீகாரத்தை  ரத்து செய்வோம் என சொல்வது அதிகபட்சமான செயல்" - மா.சுப்பிரமணியன் .

சென்னை, மெரினா கடற்கரை லூப் சாலை, டூமிங் குப்பத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,... 

ஸ்டான்லி மருத்துவமனை , திருச்சி, தருமபுரி உள்ளிட்ட மருத்துவமனை மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக மருத்துவ ஆணையம் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு?

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் ஆயுஸ் அமைச்சரையும் சந்திக்கவுள்ளோம் என்றும் அடுத்த ஆண்டு தேர்தலை மனதில் வைத்து ஆணையங்களை அனுப்பி பூதக்கண்ணாடி வைத்து குற்றம் கண்டுபிடிக்க நினைக்கிறார்கள் அவர்கள் நினைப்பது நடக்காது என்றும் கூறினார்.

மேலும் சிசிடிவி , மருத்துவர்கள் கைரேகை பதிவு என்பது உடனடியாக சரிசெய்யக்கூடிய ஒரு பிரச்சினை தான் இதற்காக அங்கீகாரம் ரத்து செய்வோம் என்பது சரியல்ல. இவையெல்லாம் சரிதானா என்பதை சம்பந்தபட்ட அதிகாரிகள் சிந்தித்து பார்க்கவேண்டும்..என கூறினார்.

சிசிடிவி கேமராக்கள் இல்லாத ஒரே காரணத்தினால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று தேசிய மருத்துவ ஆணையம் சொல்லி இருப்பது அதிகபட்சமான செயல் என்றும் கூறினார். இது குறித்து முதல்வர் வந்ததுடன் ஆலோசனை  செய்து ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து  பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் இதனால் மருத்துவ சேர்க்கை பாதிக்காது என்று பதிலளித்தார். 

அதோடு, சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வகை XBB தமிழ்நாட்டில் பரவவில்லை என்றும், எந்த வைரஸ் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பு நம்மிடம் உள்ளது என கூறினார்.தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழல் தான் உள்ளது அவர்களிடன் சிகிச்சை பெறுவர்களும் பாதுகாப்பாக தான் உள்ளார்கள் மருத்துவர்களுக்கு தமிழ்நாட்டில் தனி பாதுகாப்பு சட்டம் தேவையில்லை என கூறினார்.

மேலும் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை பணி செய்ய விடாமல்  தடுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.

இதையும் படிக்க      | " அமைச்சர் பொன்முடி பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்" - அண்ணாமலை.