300 நியாயவிலைக் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை - கூட்டுறவுத்துறை தகவல் .

300 நியாயவிலைக் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை - கூட்டுறவுத்துறை தகவல் .

நாளை முதல் 300 நியாயவிலைக் கடைகளில்  தக்காளி விற்பனை  என கூட்டுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்களின் நலன் கருதி நியாயவிலைகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. 

முதலமைச்சரின் உத்தரவையடுத்து நாளை முதல் விற்பனை தொடங்கவுள்ளது. 

ஏற்கனவே சென்னையில் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகிறது.

இன்னிலையில், இந்த  திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில் நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை தொடங்குகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com