இரு பிரிவுகளாக பிரிந்து சண்டையிட்டு கொண்ட மாணவர்கள்...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இரு பிரிவுகளாக பிரிந்து சண்டையிட்டு கொண்ட மாணவர்கள்...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே பள்ளி மாணவர்கள் இரு பிரிவுகளாக மோதிக்கொண்ட காட்சி வைரலாகி வருகிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு நேற்று ப்ரீ கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாலை பள்ளி முடிந்தவுடன் வெளியே வந்த மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து கண்மூடித் தனமாக சண்டையிட்டு கொண்டனர்.

இதையும் படிக்க :  இனி திருப்பதியில் லட்டு வழங்குவதில் புதிய உத்தரவு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

ஏற்கனவே, இருந்த முன் பகையை மனதில் வைத்து வெளியில் இருந்து அடியாட்களை கூட்டி வந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இதுபோன்று பலமுறை சாலைகளில் தகராறு நடந்தும் பள்ளி நிர்வாகமும், காவல்துறையும் இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகமும் காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், மாணவர்கள் சண்டையிட்டதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.