சென்னை டிஏவி பள்ளியுடன் இணைந்து கருத்தரங்கு...!!!

சென்னை டிஏவி பள்ளியுடன் இணைந்து கருத்தரங்கு...!!!

கோவில்பட்டி அருகே தனியார் பள்ளியில் மாணவர்கள் கற்றல் திறமைகளை வளர்த்து கொள்ளும் முறைகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரத்தில் செயல்பட்டு வரும் புனித ஓம் குளோபல் சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவர்கள் கற்றல் திறமைகளை வளர்த்து கொள்ளும் முறைகள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரத்தில் செயல்பட்டு வரும் புனித ஓம் குளோபல் சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவர்களுக்கு கற்றல், கலைத்திறமைகளை மேம்படுத்துதல், நற்பண்பை வளர்க்கும் கல்வி கற்றுதரும் வகையிலும், மருத்துவம், பொறியியல் நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் வகையிலும், சென்னையில் உள்ள  DAV கல்வி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு மற்றும் கல்வியில் குழந்தைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  
மாணவர்கள் கற்றல் திறமைகளை வளர்த்து கொள்ளும் முறைகள் குறித்தும், போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் செய்வது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.  தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.  இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:   உணவகங்களில் இரண்டு முறைக்கு மேல் எண்ணெய் பயன்படுத்தப்பட்டால்...!!!