"செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை" மா.சுப்பிரமணியன் தகவல்!

"செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை" மா.சுப்பிரமணியன் தகவல்!

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நேற்று பெய்த தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, ஆடுதொட்டி பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மழையால் சேதமடைந்த பகுதிகளில் சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

அதனை தொடர்ந்து பேசிய அவர், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் அறுவை சிகிச்சை செய்வதற்கான உடல் தகுதியை செந்தில் பாலாஜி பெற்ற நிலையில் நாளை அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும் அதன்படி நாளை அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:திருவாரூரில் இன்று கலைஞர் கோட்ட திறப்பு விழா!