குஜராத்திற்கு சிறப்பு ரயில்..! தொடங்கி வைத்தார் ஆளுநர்...!! 

 குஜராத்திற்கு சிறப்பு ரயில்..! தொடங்கி வைத்தார் ஆளுநர்...!! 
Published on
Updated on
1 min read

குஜராத்தில் நடைபெற உள்ள சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயிலை சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

சவுராஷ்டிரா மக்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் உள்ள நீண்ட கால பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக  குஜராத் மாநிலத்தில் வரும் 17 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் விராவல் நகருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலை சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர், சவுராஷ்டிராவுக்கும், தமிழ்நாட்டிற்கும்  ஆயிரம் ஆண்டுகள் பழமையான உறவுகள் உள்ளதாகவும்,  இந்தப் பயணத்திற்காக நிறைய மாணவர்கள், இளைஞர்கள் தன்னார்வலர்களாக உள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com