" எந்த இடத்தில் யாரை வைக்க வேண்டும் என்பதில் கேப்டன் தோனியை போலதான் ஸ்டாலினும்..... "

" எந்த இடத்தில் யாரை வைக்க வேண்டும் என்பதில்  கேப்டன் தோனியை போலதான் ஸ்டாலினும்..... "

சென்னை மாநகராட்சியின் மே மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று கூடியது. இக்கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினர்களிடையே காரசார விவாதங்கள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் சதீஷ் குமார் பேசுகையில்,

ஐந்தாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மன்ற கூட்டத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 

மேலும் பெருங்குடி ஏரி தான் கந்தன்சாவடி, கல்லுக்குட்டை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது என்றும், தன் தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது ஒருவராக அதை பராமரித்ததாகவும் கூறினார். அதற்கு பிறகு திமுக சட்டமன்ற உறுப்பினர் அதை கண்டுகொள்ளுவதில்லை எனவும், அதுமட்டுமின்றி தன் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு தாயார் செய்வதற்கு சரியாக இயந்திரம் இல்லை என்று அங்கு பணி புரியும் பணியாளர்கள் தெரிவித்ததாகவும், எனவே அதை சரி செய்து தர வேண்டும்"  என பேசினார்.

இவரை தொடர்ந்து பேசிய திமுக மாமன்ற உறுப்பினர் ரவி சந்திரன்,

" நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று வெற்றி பெற்றது . குறிப்பாக கேப்டன் தோனி எந்த பந்திற்கு எந்த பகுதியில் ஃபீல்டரை நிர்க்கவைக்க வேண்டும் என்று கணித்து நிற்கவைத்ததால் தான் நேற்று அந்த அணி வெற்றிபெற்றது. அதே போல் தான் முதல்வர் யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு அமைச்சர் பணி கொடுத்து சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.

மேலும், " கல்லுக்குட்டை பகுதிகளில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அங்கு வசிக்கும் 13,000 குடும்பங்களுக்கு மாமன்ற உறுப்பினர் சதீஷ் குமார் தந்தையோ (கந்தன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்) , மாமன்ற உறுப்பினராக இருந்த அவர் சித்தியோ எதுவும் செய்யவில்லை. அம்மா உணவகத்தில் உள்ள பொருட்களை கொள்ளை அடித்து விற்பதற்கு என ஒரு கடையை தொடங்கியவர் சதீஷ் குமாரின் சித்தி அமுதா. அதிமுக ஆட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் அப்பகுதிக்கு செய்ய வில்லை " என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  " தளபதி ஆட்சியில் அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய சொந்த செலவில்  அவர்களுக்கு தண்ணீர் குழாய் அமைத்து  கொடுத்ததாகவும்,  கொள்ளை அடிக்கும் ஆட்சி அதிமுக என்றும், நல்லது செய்யும் ஆட்சி திமுக எனவும் கூறினார். 

இதையும் படிக்க     | பாடமாகிறது சாவர்க்கரின் வரலாறு !

திமுக மாமன்ற உறுப்பினர் ரவி சந்திரன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, அதிமுக உறுப்பினர் சதீஷ் குமார் பேச முற்பட்டத்தால் அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்களிடையே காரசார விவாதங்கள் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் இருந்த வெளியேறிய அதிமுக சதீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.  

அப்போது பேசிய அவர்,

" பெருங்குடி ஏரி பாதுகாக்க எந்த நடவடிக்கை இல்லை. தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. மீன்கள் செத்து கிடைக்கிறது . 14 வது மண்டலகுழு தலைவர் அவதூறு பேசும் வகையில் மன்ற கூட்டத்தில் பேசுகிறார். மன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் பேச முறையாக வாய்ப்பு வழங்கவில்லை. பெருங்குடி பகுதியில் சாலை வசதி முறையாக இல்லை. பெருங்குடி ஏரியை பாதுகாக்க சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். ஏன் நிதி ஒதுக்க மாநகராட்சி மறுக்கிறது", எனவும்  கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க     | 80 வயது மூதாட்டியை இரக்கமின்றி தாக்கிய குடும்பம்...! காரணம் என்ன ....?