உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை... மின்சார வாரியம்!!

உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை... மின்சார வாரியம்!!

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வெளியூர் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அலுவலர்களுக்கு மின்வாரியம் பல உத்தரவுகளை முன்வைத்துள்ளது.  தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம்  20ஆம் தேதி தொடங்கவுள்ளது.  இந்நிலையில் மின்வாரியம் பல உத்தரவுகளை வழங்கியுள்ளது.

அதில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் 20 ஆம் தேதி முதல் கூட்டத்தொடர் முடியும் நாள் வரை காலை 9.30 மணிக்கே அலுவலகம் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் மின்வாரியம் சார்ந்த எந்த தகவல்களையும் அரசு கோரினால் உடனடியாக வழங்க தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.  

அதனோடு உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க:  நலத்திட்ட உதவி பொருட்களை சூரையாடிச் சென்ற பொதுமக்கள்...!!!