”மாணவர்கள் இப்போது வேலைவாய்ப்பு வழங்குபவர்களாக மாறிவிட்டனர்...” ஜெகதீப் தன்கர்!!

”மாணவர்கள் இப்போது வேலைவாய்ப்பு வழங்குபவர்களாக மாறிவிட்டனர்...” ஜெகதீப் தன்கர்!!

சென்னை ஐஐடியில் புதுமைக்கான மையத்தை திறந்து வைத்து பேசிய குடியரசு துணை தலைவர் உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது எனப் பேசியுள்ளார்.

ஜெகதீப் அவரது சிறப்புரையின் போது, மாணவர்கள் ஒரு நிறுவனத்தின் பலம் என்றும், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் எனவும் பேசியுள்ளார்.

மேலும் ஐஐடி-மெட்ராஸ் புதுமைகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்றும் கூறிய அவர், வேலை தேடுபவர்களுக்குப் பதிலாக, மாணவர்கள் இப்போது வேலைவாய்ப்பு வழங்குபவர்களாக மாறிவிட்டனர் என்று கூறியுள்ளார்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாடு மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இப்போது இந்தியா பேசும்போது உலகமே கேட்கும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.  மேலும் 
உலக அரங்கில் இந்தியா ஒளிரும் நட்சத்திரமாக இருப்பதாக ஜெகதீப் தங்கர் கூறியுள்ளார்.

சென்னை ஐஐடியில் புதுமைக்கான மையத்தை திறந்து வைத்து பேசிய குடியரசு துணை தலைவர் உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது எனவும் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.  மேலும் உலக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது எனவும் பெருமிதமாக கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  திமுக முன்னாள் எம்.பி. கொலை வழக்கு... ஜாமீன் மனு தள்ளுபடி!!!